கோவில்பட்டியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-08 18:45 GMT

கோவில்பட்டி:

பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து அன்னை தெரசா நகர் பகுதிக்கு வாரம் 2 முறை குடிநீர் வழங்க கோரியும், சாலை,

வாறுகால், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மந்தித்தோப்பு ரோடு லயன்ஸ் கிளப் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், ருக்மணி, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஒன்றிய குழு உறுப்பினர் முத்துசாமி, அய் யலு சாமி, முத்துராஜன், இளைஞர் பெருமன்றம் இசக்கியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்