பாலக்கோடு:
பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி சின்னவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2020-2021 மற்றும் 2021 -2022-ம் ஆண்டுகளுக்கான வரவு, செலவு குறித்து ஒன்றிய மேற்பார்வையாளர் அய்யாவு தணிக்கை செய்தார்.
மேலும் தேசிய அடையாள அட்டை வழங்குதல், தனிநபர் கழிப்பிடம் கட்டுதல், அணிவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணைத்தலைவர் சையத் சலீம், ஊராட்சி செயலாளர் சண்முகம், மக்கள் நல திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பணித்தள பொறுப்பாளர்கள் ஜோதி, தங்கமணி, பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.