137 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியாக குறைந்தது;

Update:2022-08-16 21:48 IST

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 139.55 அடி வரை உயர்ந்தது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீா்வரத்து கிடுகிடுவென குறைய தொடங்கியது. இதனால் இன்று அணையின் நீர்மட்டம் 137.75 அடியாக குறைந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1,271 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 2,150 கன அடியாகவும் இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்