நல்லம்பள்ளிவட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணாஅதிகாரிகள் பேச்சுவார்த்தை

Update: 2023-05-05 19:00 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே பாகலஅள்ளி ஊராட்சி கெங்கலாபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு புதிய டேங் ஆபரேட்டரை பணியமர்த்தி சீரான குடிநீர் வழங்ககோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் திடீரென அலுவலகத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இந்த தகவல் அறிந்து வந்த சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோரிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்