இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
கோப்புப்படம்
24-ந்தேதி முதல் பிராட்வே பேருந்து நிலையம் செயல்படாது என அறிவிப்பு
மறுசீரமைப்பு பணிகள் காரணமாக பிராட்வே பேருந்து நிலையம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது: சுப்ரீம் கோர்ட்டு வேதனை
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.
திருப்பூரில் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு
கவிஞர் வைரமுத்து கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முள்ளக்காடு கிராமத்தில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான முக்கிய தகவல்
தே.ஜ. கூட்டணியில் பா.ம.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
"அரசியலில் இருந்தே விலகுகிறேன்.." - குன்னம் ராமச்சந்திரன் திடீர் முடிவு.!
திமுகவில் இணையும் முடிவை கைவிடுவதாக குன்னம் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்: பியூஸ் கோயல்
தமிழக நலனுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறினார்.
தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிக்கு அடிக்கல்
தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் மூலம் மீஞ்சூர் பகுதியில் விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கே.என். நேரு கூறினார்.
நாளைய பொதுக்கூட்டம், தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று விருந்தளித்தார். பியூஸ் கோயல், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.