சென்னிமலை அருகே வனப்பகுதியில் தீ விபத்து

தீ விபத்து;

Update:2023-03-09 02:15 IST

சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோட்டில் மேலப்பாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் வறண்டு கிடந்த புல் மற்றும் செடி, கொடிகளில் நேற்று மதியம் திடீரென தீ பிடித்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பீடி, சிகரெட் புகைத்தவர்கள் நெருப்பை அணைக்காமல் போட்டதால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்