சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி முதியவர் சாவு

சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-10-09 18:45 GMT

உத்தமபாளையம் அருகே உள்ள சூரியநாராயணபுரத்தை சோ்ந்தவர் செல்லையா (வயது 76). கடந்த 5-ந்தேதி இவர், முல்லைப்பெரியாற்றில் குளித்து விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் அன்றையதினம் மாலை வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் தேடி அலைந்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் உத்தமபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மாயமான செல்லையாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் சின்னமனூர் அருகே எல்லைப்பட்டி முல்லைப்பெரியாறு தடுப்பணையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் மிதப்பதாக சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர். அவர்கள் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முல்லைப்பெரியாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்