தேனி அருகேகாதல் மனைவியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

தேனி அருகே காதல் மனைவியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-03-16 18:45 GMT

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பழனியப்பா தெருவை சேர்ந்த கண்ணன் மகன் நம்பிராஜன் (வயது 26). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி அரசியம்மாள் (22). அவர் ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இந்நிலையில், நம்பிராஜன் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த 14-ந்தேதி அவர் தனது மனைவியை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நம்பிராஜன் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்