நீலமணிநாத சுவாமி கோவில் தேரோட்டம்
கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
மேலக்கடையநல்லூர் பூமிநீளா சமேத நீலமணிநாத சுவாமி கோவில் பிரமோற்சவ விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 10-ம் நாளான நேற்று காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரியும், நாளை திருக்கல்யாணமும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.