திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.12 கோடி - கோவில் நிர்வாகம் தகவல்

எட்டு மாதங்களுக்குப் பின்னர் கடந்த திங்கள்கிழமை கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி துவங்கப்பட்டது.

Update: 2022-05-20 14:12 GMT

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலில், எட்டு மாதங்களுக்குப் பின்னர் கடந்த திங்கள்கிழமை கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி துவங்கப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் 30-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அந்த வகையில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த உண்டியல் எண்ணும் பணி இன்று நிறைவு பெற்றது. இதில் ஒரு கோடியே 12 லட்சத்து 11 ஆயிரத்து 598 ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்