ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

சீர்காழியில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது

Update: 2023-04-25 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்ட கல்வித்துறை சார்பில் சீர்காழி வட்டார அளவிலான தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி முகாம் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமுக்கு வட்டார கல்வி அலுவலர் பூங்குழலி தலைமை தாங்கினார். வட்டார மேற்பார்வையாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். முகாமில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை எவ்வாறு கற்றுத் தருவது என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் காமராஜ், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜ்கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் செயல் விளக்க பயிற்சி அளித்தனர். இந்த முகாமில் சீர்காழி வட்டாரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அகோரம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்