கிழக்குகடற்கரை சாலையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

திருப்பூண்டி அருகே கிழக்குகடற்கரை சாலையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலிறுத்தி வருகின்றனர்.

Update: 2023-05-26 18:45 GMT

வேளாங்கண்ணி:

திருப்பூண்டி அருகே கிழக்குகடற்கரை சாலையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலிறுத்தி வருகின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலை

சென்னையில் இருந்து புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, வழியாக தூத்துக்குடி வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக உள்ளூர் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வௌி மாநிலங்களில் இருந்து ஏராளமான பஸ் போக்குவரத்து வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு வந்த வண்ணம் உள்ளன. இதில் தினமும் நூற்றுக்கணக்கான இரு சக்கரவாகனங்களும் செல்கின்றன.

கருவேல மரங்கள்

இந்த சாலையில் திருப்பூண்டி அருகே சாலை ஓரத்தில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு வழி விட ஒதுங்கும்போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் நீண்டு வளர்ந்துள்ள கருவேல மர முட்களில் சிக்கி கொள்கின்றனர். இதனால் அவர்களின் முகம் மற்றும் கண் பகுதிகளில் கருவேல மரக்கிளைகள் பட்டு காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள கருவேலமரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்