மூதாட்டி தற்கொலை முயற்சி

திண்டிவனம் அருகே மூதாட்டி தற்கொலை முயற்சி;

Update:2022-07-18 23:01 IST

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள வடஆலபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி அம்மாள்(வயது 72). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை கவனிக்க யாரும் இல்லாததால், மனமுடைந்த ஜானகி அம்மாள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்