முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

கருங்கல் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-12-05 00:15 IST

கருங்கல்:

கருங்கல் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் சேந்திவிளை பகுதியை சேர்ந்தவர் அருள் மோகன் தாஸ் (வயது 60). இவர் கடந்த சில நாட்களாக நோயால் அவதிபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்