பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

Update:2022-12-02 00:15 IST

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் திருச்செங்கோடு பஸ் நிறுத்த பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த முதியவர் வெள்ளை நிற அரைக்கை சட்டையும், நீள நிற கைலியும் அணிந்திருந்தார். மேலும் இறந்து கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்