தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை

திருவண்ணாமலையில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-23 13:05 GMT

திருவண்ணாமலை பாவாஜி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 63). இவரது மனைவி மல்லிகா (62).

முருகன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த மல்லிகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த முருகன் நீண்ட நேரம் கதவைத்தட்டியும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்த போது மல்லிகா பிணமாக தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்