30-ந் தேதி நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-ந் தேதி நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற உள்ளது என விவசாய தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Update: 2023-09-19 18:45 GMT

நாகையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இதனை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்