அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-03-07 19:15 GMT

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து காஞ்சீபுரத்துக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதை முன்னிட்டு நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்ன மற்றும் பொதுரக நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் அரவைக்காக காஞ்சீபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்