மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது

Update: 2023-09-25 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல் வேலைவாய்ப்பு, முதியோர், விதவை உதவித்தொகை, புகார் தொடர்பான மனுக்கள் மாற்றுத்திறனாளி் அடையாள அட்டை, வங்கிகடன், உபகரணங்கள் அடிப்படை வசதி கோரி என மொத்தம் 304 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.6 ஆயிரத்து 552 மதிப்பீட்டில் இலவச சலவைப்பெட்டி ஒரு பயனாளிக்கும், தலா ரூ.5 ஆயிரத்து 900 மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்கள் 2 பயனாளிகளுக்கும் கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தனித்துணை கலெக்டர் கண்மணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேசன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்