நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது:ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

Update: 2023-09-05 19:30 GMT

பென்னாகரம்:

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தண்ணீர் திறப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி நீர் மேலாண்மை வாரிய உத்தரவின் பேரில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

கடந்த 3-ந் தேதி முதல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி, மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்