மாயமான மீனவரின் உடல் மீட்பு

மாயமான மீனவரின் உடல் மீட்கப்பட்டது.

Update: 2022-09-18 18:45 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் கடந்த 15-ந் தேதி நாட்டுப் படகு ஒன்றில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கியது. இதில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த நான்கு மீனவர்களை அப்பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீட்டனர். இதில் நம்புதாளையை சேர்ந்த மீனவர் முருகேசன் (வயது 50) என்பவர் மாயமானார். தொடர்ந்து நம்புதாளை கிராம மீனவர்கள் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று படகு கவிழ்ந்த பகுதியில் முருகேசனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் அருகே சுமார் 25 கடல் மைல் தூரத்தில் மீனவர் முருகேசனின் சடலத்தை மீட்டனர். அவரது உடல் நாட்டுப் படகு மூலம் நம்புதாளை கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த முருகேசனுக்கு முருகம்மாள் என்ற மனைவியும், ஐந்து மகன்களும் உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்