பிளஸ்-1 தேர்வில் 94.85 சதவீதம் தேர்ச்சி

சிவகங்கை பிளஸ்-1 தேர்வில் 94.85 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 9-வது இடம் பெற்றது.

Update: 2023-05-19 18:45 GMT

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 6,927 மாணவர்களும் 8,329 மாணவிகளும் சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 256 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 6,417 மாணவர்களும் 854 மாணவிகளும் சேர்த்து 14,471 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தத்தில் இது 94.85 சதவீத தேர்ச்சி ஆகும். மேலும் மாநில அளவில் பிளஸ்-1 தேர்வில் சிவகங்கை மாவட்டம் 9-வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் 163 பள்ளிகளில் இந்த தேர்வு எழுதினார்கள்.

இதில் 7 அரசு பள்ளிகளும் 2 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 7 பகுதியாக உதவி பெறும் பள்ளிகளும், 31 மெட்ரிக் பள்ளிகளும், 2 சுயநிதி பள்ளிகளும், சமூக நலத்துறை ஒரு பள்ளியும் சேர்த்து மொத்தம் 50 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இந்த தகவலை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்