ஓசூரில் ஓய்வூதியர்கள் நல சங்கம் சார்பில்மத்திய அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம்

Update: 2023-05-31 18:45 GMT

ஓசூர்

சென்னை ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் ஓசூர் கிளை சார்பில் இ.பி.எப் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. ஓசூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள தபால் நிலையத்தின் முன்பு நடந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமாரன் முன்னிலை வகித்தார். இதில், இ.பி.எப். பென்ஷன் பெறும் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் பஞ்சப்படியுடன் ரூ.9,000 வழங்க வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.3,000 வழங்க வேண்டும். இ.பி.எப். பென்ஷன் பெறும் ஓய்வூதியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இ.எஸ்.ஐ. திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி முழு ஊதியத்திற்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்