நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

தேவாரம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-10-17 19:45 GMT

தேவாரம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, டி.ஆர்.புரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இத்தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்