நாளை மின் நிறுத்தம்

அய்யம்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Update: 2023-02-12 19:04 GMT

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அய்யம்பேட்டை நகரம் முழுவதும், கணபதி அக்ரகாரம், ஈச்சங்குடி, வீர மாங்குடி, தேவன்குடி, வழுத்தூர், இளங்கார்குடி, அகரமாங்குடி, வடக்கு மாங்குடி, பசுபதிகோவில், மாத்தூர், வீரசிங்கம் பேட்டை, வயலூர், ராமாபுரம், நெடார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரிய பாபநாசம் உதவி செயற்பொறியாளர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்