பிரதமர் மோடி வருகை - ராமேஸ்வரத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பு

ராமேஸ்வரம் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-19 03:36 GMT

சென்னை,

தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று வருகிறார். சென்னையில் 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இதுதவிர அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீரங்கம்,ராமேஸ்வரம் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தீர்த்தங்களையும் பிரதமர் மோடி தனித்தனியாக சேகரிக்கிறார்.இந்த நிலையில், ஸ்ரீரங்கம், ராமேசுவரத்தை தொடர்ந்து தனுஷ்கோடிக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

இந்த நிலையில் பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதசுவாமி கோயிலில் நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .

நாளை பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது

நாளை பகல் 12 மணி முதல் நாளை மறுநாள் பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது

நாளை மறுநாள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ராமேஸ்வரம் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்