பொன்னமராவதி அருகே மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பொன்னமராவதி அருகே மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2022-08-06 19:19 GMT

பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகரில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் 30 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், மாற்று இடத்தில் மின் மயானம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ. கூறினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்