மணல் கடத்தல்; மாட்டுவண்டி பறிமுதல்

மணல் கடத்தல் தொடர்பாக மாட்டுவண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-31 18:45 GMT

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று திருமாணிக்குழியில் கெடிலம் ஆற்றங்கரையோரம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒருவர், மாட்டுவண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தார். உடனே போலீசார், அவரை பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும், அந்த நபர் மாட்டுவண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்