குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-08-25 00:47 IST

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் ரோடு, சென்னை-மும்பை ரோடு, ஐ.வி.பி.எம். பகுதியில் குப்பைகள், கோழிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த நவ்லாக் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்