மரக்கன்று நடும் விழா

வள்ளியூர் நகர பஞ்சாயத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.;

Update:2022-07-24 01:24 IST

வள்ளியூர்:

வள்ளியூா் நகர பஞ்சாயத்து சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுஷ்மா தலைமை தாங்கினார். வள்ளியூர் நகர பஞ்சாயத்து பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நகர பஞ்சாயத்து தலைவி ராதா ராதாகிருஷ்ணன் நட்டார். மேலும் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால் சுத்தம் செய்யப்பட்டது. தெப்பக்குளத்தில் பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவு அகற்றும் பணி மற்றும் பெரியகுளத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் முட்புதா்கள் அகற்றும் பணிகள் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணை தலைவர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர் டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்