பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி

நகரை தூய்மையாக வைப்பது குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Update: 2022-07-05 18:25 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில், தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு என் குப்பை, என் பொறுப்பு என்ற பெயரில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் நகராட்சியில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில். நகராட்சி ஆணையாளர் மூர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் எனது நகரத்தை தூய்மையாக வைத்திருப்பது எனது கடமை, தூய்மை பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவேன், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்கும்படி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பள்ளிகளில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றன.இதில் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியை பொறுப்பு ரஞ்சனி, ஆசிரியை கோபி லட்சுமி, சுகாதார மேஸ்திரி சங்கர் மற்றும், ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்