மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல்

மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2022-09-04 23:38 IST

இலுப்பூர் போலீசார் குறிச்சிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தின் உரிமையாளர் இலுப்பூர் கீழஎண்ணை பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 21) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்