அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-09-14 18:53 GMT

சேமங்கி மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வேலாயுதம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்