கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவில்மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

Update: 2023-03-23 19:00 GMT

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

விளையாட்டு போட்டிகள்

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்போட்டிகளும், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகளும், இறகுப்பந்து விளையாட்டில் இரட்டையர் பிரிவு போட்டிகளும், கபடி, ஜூடோ மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகள் நடந்தன.

சான்றிதழ்கள்

இப்போட்டிகளை கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் வரவேற்றார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து வயது பிரிவுகளிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்