பொங்கல் பண்டிகையை முன்னிட்டுநாமக்கல்லில் கரும்பு விற்பனை தீவிரம்

Update: 2023-01-13 18:45 GMT

நாமக்கல்லில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று கரும்பு விற்பனை தீவிரமாக நடந்தது. ஒரு ஜோடி கரும்பு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட கரும்பு விற்பனை சற்று குறைவாக இருப்பதாகவும், நாளை (இன்று) விற்பனை அதிகரிக்கும் என கரும்பு வியாபாரிகள் தெரிவித்தனர்.இதேபோல் போகி பண்டிகையை முன்னிட்டு ஆவாரம் பூ, பூலாம் பூ மற்றும் வேப்பிலை விற்பனையும் ஜோராக நடந்ததை காணமுடிந்தது. நாமக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் ஆவாரம்பூ மற்றும் பூலாம் பூ கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்