பாலக்கோடு அருகே10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை

Update: 2023-10-01 19:00 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே 10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெப்பாளம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பத்மா (33). இவர்களுக்கு சுமித்ரா (17), சுதா (14) என 2 மகள்கள் இருந்தனர்.

இதில் சுதா பேளாரஅள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு சுதா மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

இதற்கிடையே கடந்த 23-ந் தேதி கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த சுதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை மகளை மீட்டு உடனடியாக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சுதா உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்