சிவகங்கையில் தீக்குளித்து பெண் தற்கொலை .

சிவகங்கையில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்

Update: 2023-02-11 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 58).இவரது மனைவி பூங்கோதை (54). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது பூங்கோதை தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்