2 பெண்கள் தற்கொலை

கிருஷ்ணகிரி, சிங்காரப்பேட்டையில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-02-12 18:45 GMT

கிருஷ்ணகிரி, சிங்காரப்பேட்டையில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி அண்ணா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி வள்ளி (வயது 55). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த வள்ளி கடந்த 10-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப பிரச்சினை

சிங்காரப்பேட்டை அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கலைச்செல்வி (45). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கலைச்செல்வி அளவுக்கு அதிகமாக ரத்த கொதிப்புக்கான மாத்திரைகளை தின்றுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்