விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Update: 2023-02-23 19:00 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் மலையப்பன் (வயது 56) விவசாயி. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உடல் நிலை சரியாகாததால் கடந்த 16-ந் தேதி தனது வீட்டில் தனியாக இருந்த மலையப்பன் விஷம் குடித்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்