கோரிக்கை அட்டை அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றினர்
முத்துப்பேட்டை அரசு பள்ளிகளில் கோரிக்கை அட்டை அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றினர்
தில்லைவிளாகம்:
ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் 47 ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.