கார் மோதி இளம்பெண் பலி

சொக்கம்புதூர் சாலையில் கார் மோதி இளம்பெண் பலியானார்.

Update: 2023-06-01 00:00 GMT

கோவை

கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுகவர்ஷா (வயது 25). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார். அவர் சொக்கம்புதூர் சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சுகவர்ஷாவின் தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோவை மாநகர மேற்கு குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்