திருக்கோவிலூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருக்கோவிலூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-12-16 18:45 GMT


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் அடுத்த எல்ராம்பட்டு கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் கஞ்சா மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதேஊரை சேர்ந்த ஏழுமலை(வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்