கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Update: 2023-05-08 18:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டி மேற்கு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் நிஷாந்தி தலைமையிலான போலீசார் மத்திய பஸ் நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவரிடம் சோதனை செய்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்ட திருபுவனையை சேர்ந்த முத்தரசு (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் ஒரே நாளில் கஞ்சா வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்