ஓட்டலில் மதுஅருந்த அனுமதித்தவர் மீது வழக்கு
கிணத்துக்கடவு அருகே ஓட்டலில் மதுஅருந்த அனுமதித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் சட்ட விரோதமாக மதுஅருந்த அனுமதிப்பதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் ஓட்டல்களில் சோதனை நடத்தினர். இதில் ஒரு ஓட்டலில் அரசு அனுமதியின்றி, மதுஅருந்த அனுமதித்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த பவுல்ராக் (வயது 41) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.