தேர் பவனி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கணபதியில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தின் தேர் பவனி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-10-08 21:00 GMT

கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவில் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் தேர் பவனி விழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர் பவனி விழா வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு தேர்பவனி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பங்கு தந்தைகள் ஜெரோம், ஜேசுராஜ், ஜான் பால் மற்றும் ஆலய பங்கு மக்கள் திரளானவர்கள் பங்கேற்றனர். தேர்பவனி விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, காணிக்கை பவனி நடக்கிறது.

தொடர்ந்து 15-ந் தேதி காலை 6.30 மணிக்கு முதல் திருப்பலி, காலை 8.15 மணிக்கு மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் திருவிழா கூட்டுப்பாடற் திருப்பலி, இரவு 7 மணியளவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது. 22-ந் தேதி கொடியிறக்கத்துடன் தேர்பவனி விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்