கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு

சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-07-16 00:15 IST

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள மஞ்சபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 55) விவசாயி. இவர் நேற்று முன்தினம் வயலுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த கிணற்றின் அருகே படுத்துக்கிடந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு வீரர்கள் மூலம் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்