திசையன்விளை:
உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் நேற்று நவ்வலடி, ஆத்தங்கரை பள்ளிவாசல், தோப்புவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தோப்புவிளை ஊர் அருகில் அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக ஆத்தங்கரை பள்ளிவாசல் வடக்கு தெருவை சேர்ந்த மாடசாமி ராஜா (வயது 40) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்களையும், ரூ.150-ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர்.