மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-18 19:15 GMT

அரிமளம் அருகே கல்லுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மதி (வயது 47). இவர், 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து அரிமளம் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் உறவினர் ஒருவர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்