மதுபானம் வைத்திருந்தவர் சிக்கினார்

பெரியகுளத்தில் மதுபானம் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-25 18:45 GMT

பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனுசுயா மற்றும் போலீசார் டி.கள்ளிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கழிவறை அருகே அரசு அனுமதியில்லாமல் மதுபாட்டில்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மதுபான பாட்டில்கள் வைத்திருந்ததாக கைலாசப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 58) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்