தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் திராவிடர் கழகம் - அமைச்சர் கீதாஜீவன்

தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருப்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் தான் காரணம் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-06 08:46 GMT

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பில் திராவிட பயிற்சி பயிலரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

திராவிட மாடல் பயிற்சி பயிலரங்க கூட்டத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட சமூகநல மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் பயிற்சி பயிரங்கத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

திராவிட கழகம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வரை நமது கொள்கைகளை, சித்தாந்தங்களை சட்டமாக்கினார்கள், திட்டமாக்கினார்கள், அரசு ஆணையாக பிறப்பிக்கப்பட்டுதான் இன்று இவ்வளவு முன்னேற்றங்கள் வந்திருக்கிறது. தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்